கிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்
தொடரும் விலை உயர்வால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்படுகிறது.
Recommended Video
பாட்னா: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்பட்டு பீகார் எல்லையில் விற்கப்படுகிறது.
17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. முடிவே இல்லாமல் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை ரூ90 ஐ தொட்டாலும் ஆச்சரியம் இல்லை.
இதனால் சாமானிய மக்கள் மிகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படும் நேபாளத்தில் இருந்து எல்லை மாநிலங்களுக்கு கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் பெட்ரோல் ரூ65; டீசல் 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசல் பீகார், மேற்கு வங்க எல்லைகளில் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எல்லைகளில் கனஜோராக நடைபெற்ற இக்கடத்தலை தடுப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Bahriach: In wake of rising fuel prices in India, Petrol & Diesel being allegedly smuggled from Nepal. Police says, 'we will take strict action against those involved & will also take precautionary measures in the future.' pic.twitter.com/4CmuKeF9k6
— ANI UP (@ANINewsUP) May 29, 2018
மேலும் நேபாள எல்லைகளுக்குள் சென்றும் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவதற்காக காத்திருக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.