ஆனந்துக்கும் பாரதரத்னா விருது கொடுங்கள்.. கங்குலி வலியுறுத்தல்
கொல்கத்தா: செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாரதரத்னா விருது பெற முழுமையாக தகுதியானவர். சச்சினுக்குக் கொடுப்பதைப் போல ஆனந்த்துக்கும் பாரத ரத்னா விருது கொடுத்துக் கெளரவி்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது தரும் மத்திய அரசின் முடிவு வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.
அதேபோல, இந்த விருதைப் பெறக் கூடிய தகுதியுடன் கூடிய வீரராக என் மனதில் விஸ்வநாதன் ஆனந்த் தோன்றுகிறார். அவருக்கும் பாரத ரத்னா பெற முழுத் தகுதிகள் உள்ளன.
ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆனந்த். இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கும் விருது வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர் பெரும்பாலான நாட்களில் ஸ்பெயினிலேயே தங்கியிருப்பது அவருக்கு எதிராக போகலாம் என்று கருதுகிறேன் என்றார் கங்குலி