For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல்வாதிகளே, வளருங்கள்.. ஜவகர்லால் பல்கலைக்கழக விவகாரம் பற்றி கவுதம் கம்பீர் கோபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதில் அரசியல்வாதிகள் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் தாய் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Gautam Gambhir slams politicians on twitter over JNU row

இதுகுறித்து டிவிட்டரில் கம்பீர் வெளியிட்ட ஒரு கருத்தில், ஜவகர்லால் நேரு மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய வீடியோவை பார்த்து ஷாக் ஆனேன். அரசியல்வாதிகளே வளருங்கள். இதில் அரசியல் செய்யாதீர்கள், தாய் நாட்டுக்காக ஒன்றுபடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரான யோகேஷ்வர் தத், மாணவர்கள் போராட்டத்தை விமர்சித்திருந்த நிலையில், மாணவர்களுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு அளித்ததைதான் கம்பீர் இப்படி சாடியிருக்க கூடும் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது.

English summary
A day after Olympian wrestler Yogeshwar Dutt expressed disappointment over ongoing protest in JNU over freedom of speech, now senior India cricketer Gautam Gambhir has slammed the politicians and asked them to grow up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X