For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்க முயற்சி.. துப்பாக்கிச்சூடு குறித்து குலாம் நபி ஆசாத்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கும் முயற்சி என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கும் முயற்சி என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Ghulam Nabi Azad condemns for the police fire in Thoothukudi

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததை ஏற்க முடியாது என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

English summary
Ghulam Nabi Azad condemns for the police fire in Thoothukudi. He said Central govt is trying to impose RSS polycies in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X