For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் பேஸ்புக் நண்பருடன் பத்மாவத் பார்க்க போன இளம்பெண்... தியேட்டரில் வைத்து பலாத்காரம்!

ஹைதராபாத்தில் முகநூல் நண்பருடன் பத்மாவத் திரைப்படம் பார்க்க போன 19 வயது இளம்பெண் தியேட்டரில் வைத்தே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பேஸ்புக் நண்பருடன் படம் பார்க்க சென்ற இளம்பெண் பலாத்காரம் !!- வீடியோ

    ஹைதராபாத் : ஹைதராபாத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானவருடன் பத்மாவத் திரைப்படம் பார்க்கப் போன இளம்பெண் தியேட்டரில் வைத்தே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஹைதராபாத்தில் தியேட்டருக்குள் வைத்து 19 வயது இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன் 19 வயது பெண்ணும், இளைஞர் ஒருவரும் அறிமுகமாகியுள்ளனர்.

    இரண்டு மாதமாக நட்பு நீடித்த நிலையில் பத்மாவத் திரைப்படம் பார்ப்பதற்காக தனது நண்பருடன் ஹைதராபாத் பிரசாந்த் திரையரங்கிற்கு சென்றுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தியேட்டரில் அதிக மக்கள் கூட்டம் இல்லாததை சாதகமாக்கிக் கொண்டு அந்த இளைஞர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்த இளம்பெண்

    காயமடைந்த இளம்பெண்

    பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் அந்தரங்க உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். பெண்ணின் புகாரையடுத்து சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

    தியேட்டர் உரிமையாளர் மீதும் வழக்கு

    தியேட்டர் உரிமையாளர் மீதும் வழக்கு

    இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 376ன் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்திற்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தியேட்டரில் வைத்து பலாத்காரம்

    தியேட்டரில் வைத்து பலாத்காரம்

    மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாபவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபருடன் வெளியே செல்வது ஆபத்தானது என்பதை பெண்கள் உணராத வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

    அறிமுகமில்லாதவர்களின் பழக்கம்

    அறிமுகமில்லாதவர்களின் பழக்கம்

    முகநூலில் அறிமுகம் ஆகும் நண்பர்கள் பற்றிய எந்த விவரமும் தெரியாமல் அவர்களுடன் பழகுவது ஆபத்தானது என்று பல சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆனால் இது ப்ரெண்டிலியான சமூகம் என்று நவீனமயத்தை காரணம் சொல்லும் இளசுகளின் வீண் விதண்டாவாதங்கள் அவர்களின் வாழ்வையே சீரழித்து விடுகின்றன என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

    English summary
    Girl allegedly raped in Hyderabad theatre while watching Padmaavat with her facebook friend, girl admitted at hospital with severe injuries and the man arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X