புகார் அளிக்காத காப்பகத்தார்
கடந்த செவ்வாயன்று காலை பள்ளிக்குச் செல்வதாக காப்பகத்திலிருந்து கிளம்பிய மாணவி, மீண்டும் திரும்பவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அம்மாணவி சோகமாகக் காணப்பட்டார் என்றும் காப்பகத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், மாணவி மாயமானதாக காப்பகம் தரப்பிலிருந்து இதுவரை தங்களுக்கு புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏரிக்கு அருகே இளநீர் கடை வைத்திருக்கும் ஒருவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் அம்மாணவி சுற்றியதைக் கண்டுள்ளார். மேலும், அம்மாணவியிடம் அவர் விசாரித்தபோது, ‘தனது தந்தையிடம் வீட்டுச் சாவி வாங்க காத்திருப்பதாக' தெரிவித்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அப்பகுதியில் அம்மாணவியைக் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவி காணாமல் போன நிலையிலும் அதுகுறித்து அந்த காப்பகத்திலிருந்து போலீஸில் புகார் தரப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது. காப்பகம் பெரும் அஜாக்கிரதையுடன் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் லால்பாக் ஏரிப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் மக்கள் புகார் கூறியுள்ளனர். தகுந்த வேலி அமைக்கப்பட்டு, காவலாளி நியமிக்கப்பட்டுள்ள அங்கு மாணவி ஒருவர் அங்கு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதன் மூலம் அங்கு பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.