For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா முதல்வர் மீண்டும் மும்பை மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயிறு வலி காரணமாக கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் நேராக சட்டசபைக்கு சென்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Goa CM Parrikar gets admitted in Lilavati hospital

பிப்ரவரி 25ம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 1ம் தேதி வீடு திரும்பிய அவர் வீட்டில் இருந்தபடியே அரசு பணி செய்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தான் இல்லாத நேரத்தில் அரசு பணி செய்ய மூன்று மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். மும்பைக்கு கிளம்பும் முன்பு தனது வீட்டில் அமைச்சர்களை சந்தித்து பேசினார் பாரிக்கர்.

English summary
Goa chief minister Manohar Parrikar is admitted in Mumbai Lilavati hospital on monday evening. His office said that if needed, he may even go abroad for further treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X