கோவாவில் தொங்கு சட்டசபையா… பாஜகவா…. ஆட்சியை பிடிக்கப் போவது யார்?
கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தொங்கும் சட்டசபை அமையும் என்றும் பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டன. இன்றும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் உண்மை நி
பானாஜி: கோவா சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கடந்த 4ம் தேதி தேர்தல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் வென்று இந்த முறை ஆட்சியை அமைக்கப் போவது யார்?
கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள். இந்த 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
கோவாவில் கடந்த சட்டசபை தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களைப் பிடித்து ஆட்சியை அமைத்தது பாஜக. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் கூட்டணி அமைத்துக் கூட அதனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் பாஜக 36 இடங்களில் போட்டியிட்டுள்ளது. 4 இடங்களில் சுயேட்சைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. 9ம் தேதி அனைத்து 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகின. பல கருத்துக்கணிப்புகள் பாஜக 15ல் இருந்து 21 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன. காங்கிரஸ் கட்சி கோவா வடக்கில் 5 லிருந்து 9 இடங்களிலும், தெற்கில் 6 லிருந்து 10 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த முறை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டுள்ளது. இந்தக் கட்சி 3 லிருந்து 4 இடங்கள் வரை வெல்லும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.