பாலியல் சாமியார் ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!
20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சாமியார் ராம் ரஹீம் சிங் மேல் முறையீடு செய்துள்ளார்.
சண்டிகர்: பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சாமியார் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
சாமியார் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை என்றும் தனது ஆசிரமத்தில் உள்ள ஆண் பெண் சீடர்கள் பேசிக் கொள்வதைக் கூட விரும்பாத அவர், பேசிக்கொள்ளும் சீடர்களுக்கு தண்டனை அளித்து வந்ததாகவும் அவரது முன்னாள் சீடர்கள் தெரிவித்தனர்.
பெண் சீடர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்திய சாமியார் ராம் ரஹிம் ஆண் சீடர்களை ஓரினச்சேர்க்கையாளராக மாற்றியதும் பலருக்கு ஆண்மை நீக்கம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் நீரிழிவு நோயால் இரவில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் செக்ஸ் அமையான அவரால் சிறையில் இருக்கமுடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ஹரியானா ஹைகோர்ட்டில் ராம் ரஹீம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.