கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் 70வது வயதில் மறுமணம்
மும்பை: கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் தனது 70வது வயதில் மறுமணம் செய்துள்ளார்.
கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் ஓலாராம் ஹரியானி(70). ஓலாராம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் மனைவி இறந்துவிட்டார். தற்போது மும்பையில் வசித்து வரும் அவரின் மகனும், மகள் அஞ்சலியும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.
ஓலாராமின் மகள் அஞ்சலியை தான் சுந்தர் பிச்சை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஓலாராம் கோட்டா நகரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்த மாதுரி சர்மா(65) என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
மாதுரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி இறந்துவிட்டார். ஓலாராமும், மாதுரியும் ஆர்யசமாஜ் முறைப்படி செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து ஓலாராம் கூறுகையில்,
தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தது போன்று வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு என தெரிவித்துள்ளார்.