ஆதார் உதவி எண் பீதி.. நாங்கள்தான் காரணம் என்று கூகுள் விளக்கம்!
Recommended Video
மும்பை: போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதைக்கொண்டு அந்த நபரின் தொலைபேசி எண், வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியே எடுத்துவிடலாம் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கருத்து பரவியது.
டிராய் தலைவர் இதுபோல தனது ஆதார் எண்ணை கொடுத்து விட்டு சிக்கலில் மாட்டினார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக பலரது செல்போன்களில் ஆதார் உதவி எண்கள் என்ற பெயரில் 11 இலக்க எண்கள் தானாகவே சேவ் ஆகி இருந்தன.
இதனால் செல்போன் பயனாளர்களுக்கு குழப்பமும் ஏற்பட்டது. இது போன்ற எண்களை இணைப்பதற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆதார் அமைப்பு தெரிவித்து விட்டது .மேலும் இது காலாவதியான எண் என்றும் அது தெரிவித்திருந்தது.
மும்பை: போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதைக்கொண்டு அந்த நபரின் தொலைபேசி எண், வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியே எடுத்துவிடலாம் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கருத்து பரவியது.டிராய் தலைவர் இதுபோல தனது ஆதார் எண்ணை கொடுத்து விட்டு சிக்கலில் மாட்டினார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக பலரது செல்போன்களில் ஆதார் உதவி எண்கள் என்ற பெயரில் 11 இலக்க எண்கள் தானாகவே சேவ் ஆகி இருந்தன.இதனால் செல்போன் பயனாளர்களுக்கு குழப்பமும் ஏற்பட்டது. இது போன்ற எண்களை இணைப்பதற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆதார் அமைப்பு தெரிவித்து விட்டது .மேலும் இது காலாவதியான எண் என்றும் அது தெரிவித்திருந்தது.— Google India (@GoogleIndia) August 3, 2018
இந்த நிலையில் கூகுள் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளக்கத்தில், இந்த உதவி எண்ணை தாங்கள்தான் செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வைத்ததாகவும், செல்போன்களை மாற்றும் போது இந்த காண்டாக்ட் அடுத்த செல்போனிலும் செல்லக் கூடியது என்றும் இதை பயனாளர்கள் தாங்களாகவே டெலிட் செய்து விடுமாறும் கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. இனிவரும் செல்போன்களில் இதுபோன்ற அம்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் கூகுள் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.