For Daily Alerts
Just In
வெள்ளம் வந்தால் 3 நாளுக்கு முன்பே கூகுள் எச்சரிக்கும்.. மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம்
Recommended Video
கூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ
டெல்லி: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து நாட்டில் வெள்ள சேதத்தை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை மத்திய நீர் ஆணையத்திற்கு கூகுள் வழங்கும்.
இதை பயன்படுத்தி மத்திய நீர் ஆணையம் முன்னெச்சரிக்கையாக செயல்பட முடியும்.
கூகுள் கணிப்புகள் அடிப்படையில் வெள்ள எச்சரிக்கை காலம் மூன்று நாட்களாக அதிகரிக்கும். இதனால் முன்கூட்டியே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
கணிப்புகள் இந்த ஆண்டு சோதனை அடிப்படையில் நடத்தப்பட்ட உள்ளன. இதன் பின்னர் படிப்படியாக இவற்றின் தரம் மேம்படுத்தப்படும்.
Comments
English summary
The Central Water Commission (CWC) and Google on Monday teamed up and signed an agreement for flood predictions across the nation.