சூழ்ந்து கொண்ட வீரர்கள்.. விண்ணை பிளந்த கோஷம்.. காஷ்மீரில் நடந்த நிகழ்வு.. வியந்த போன ராஜ்நாத் சிங்!
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக சேர்ந்த எழுப்பிய பெரிய கோஷம் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக சேர்ந்த எழுப்பிய பெரிய கோஷம் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது எல்லையில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
முதலில் அவர் லாடக்கில் நேற்று பார்வையிட்டார். அங்கு சூழ்நிலை எப்படி இருக்கிறது, அமைதி திரும்பிவிட்டதா என்று ஆலோசனைகளை மேற்கொண்டார்.
உறுதி அளிக்க முடியாது.. ராஜ்நாத் சிங் சொன்ன விஷயம்.. படைகளை வாபஸ் வாங்காத சீனா.. என்ன நடக்கிறது?
இன்று காஷ்மீர் சென்றார்
இந்த நிலையில் இன்று அவர் காஷ்மீர் சென்று பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீரில் எப்படி பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று பார்வையிட்டார். எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனை செய்தார். அதோடு அங்கிருக்கும் வீரர்களிடம் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
என்ன கோஷம்
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று சீக்கிய வீரர்கள் முக்கியமான கோஷம் ஒன்றை எழுப்பினார்கள்.ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் " Bole So Nihaal... Sat Sri Akal" என்ற சீக்கிய கோஷத்தை எழுப்பினார்கள். இதன் அர்த்தம் " சந்தோஷத்தில் கோஷமிடுங்கள்.. உண்மை என்றைக்கும் அழியாத ஒன்று" என்பதாகும். சீக்கியர்கள் பயன்படுத்தும் வெற்றி கோஷம் ஆகும் இது.
யார் சொன்னது
சீக்கிய மதத்தின் 10வது குருவான, குரு கோபிந்த் சிங் வெளியிட்ட கோஷம் ஆகும் இது . வெற்றியின் போது அவர்கள் இந்த கோஷத்தை பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் இன்று ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த கோஷத்தை எழுப்பினார்கள். நாடி நரம்பு எல்லாமும் உணர்ச்சி பொங்கும் வகையில் காஷ்மீரின் மலை முகடுகளில் நின்று கொண்டு அவர்கள் இந்த கோஷத்தை எழுப்பினார்கள்.
மீண்டும் கேட்டார்
இந்த கோஷம் மலை முழுக்க மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இதை கேட்டதும் உடல் புல்லரித்து போன அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பும்படி கூறினார். அவர்களின் வானை பிளக்கும் கோஷத்தை பார்த்து ராஜ்நாத் சிங் வியந்து போனார். தற்போது இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.