ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து...26 பேர் பலி?
கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணம் செய்து ஆற்றில் மூழ்கிய மற்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

அரசுப் பேருந்து பாலத்தை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
4 நாள் பிளான்.. திடீரென தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆளுநர் ரவி.. என்ன காரணம்?
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 24 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஜனகரெட்டி கூடம் பகுதியில் ஏலூர் அருகே ஆற்றைக் கடப்பதற்காக பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. இதனால் பேருந்து ஆற்று நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். பேருந்து நீருக்குள் மூழ்கி உள்ளதால் அனைவரும் இறந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.