இந்தியா தோல்வி எதிரொலி: மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர்!
லக்னோ: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததால், அதிர்ச்சி அடைந்த உத்திர பிரதேச அரசு ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத உத்திரப்பிரதேச கிரிக்கெட் ரசிகர் உமேஷ் ( 50 ), மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் அந்த மாநில நீர்ப்பாசனத்துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார்.
உமேஷின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே இந்தியாவின் தோல்வி தான் உமேஷின் தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதாக என விசாரணைக்குப் பின்னரே உறுதியாக தெரிய வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.