விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு மட்டும் தீர்வாகாது… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
விவசாயிகள் தற்கொலை செய்து செய்து கொண்டால் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டும் தீர்வாகாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு ஒன்றை குஜராத்தை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு மட்டும் தீர்வாகாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.