கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார்.. அடித்து சொல்கிறார் சு.சாமி
கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் முதல்வர் பதவியை ஜேடிஎஸ்க்கு விட்டுக்கொடுத்து முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தனியே ஆலோசனை
இதனால் கர்நாடகாவை ஆளப்போவது யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், ஜேடிஎஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காங் கூட்டணி
ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பாவின் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் வஜூபாய் வாலா பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதேநேரத்தில் கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளும் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.
|
எடியூரப்பாவைதான் அழைப்பார்
இதனால் ஆளுநர் வஜூபாய் வாலா முதலில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் எடியூரப்பாவைதான் அழைப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தனிபெரும் கட்சி
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார். தனிபெரும் கட்சியாக உள்ளதால் பாஜகவைதான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என தெரிவித்துள்ளார்.