ரூ500, ரூ1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிச. 30க்கு மேல் கால நீட்டிப்பு இல்லை!
செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கால நீட்டிப்பு இல்லை என அறிவித்துள்ளது மத்திய அரசு.
மும்பை: செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ந் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை நீட்டிக்கப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 30-ந் தேதி பின்னர் மார்ச் 31-ந் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம் என்றும் ஒருநபர் நாளொன்றுக்கு ரூ2,000 மட்டுமே பழைய நோட்டுகளை மாற்ற முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது