விவசாயிகள், மீனவர்கள் மேம்பாட்டுக்கு ரூ1 லட்சம் கோடி நிதி... பிரதமர் மோடி உறுதி
சமஸ்திபூர்: நாட்டின் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கு ரூ1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பீகாரில் 4 இடங்களில் பிரதமர் மோடி இன்று சூறவாளி பிரசாரம் செய்தார். இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:
சலூன் கடைகாரரிடம் பேசும் மோடி 7 ஆண்டுகாலங்களில் ஏன் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை? சீமான்
முடிவு இப்படித்தான் இருக்கும்
சமஸ்திபூரில் பெருந்திரளான மக்கள் கூடி இருக்கிறீர்கள். நவம்பர் 10-ந் தேதி எப்படியான முடிவு வரும் என்பதை இந்த கூட்டமே வெளிப்படுத்துகிறது.
ரூ1 லட்சம் கோடி
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை கையில் எடுத்திருக்கின்றன. குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். நாட்டின் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு என மத்திய அரசு ரூ1 லட்சம் கோடி நிதி உதவி வழங்க இருக்கிறது.
பீகாரை மீட்போம்
பீகார் மாநிலத்தை நோயின் பிடியில் இருந்து மீட்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பீகாரை நோயின் பிடியில் இருந்து மீட்கும்.
தன்னிறைவான பீகார்
பீகார் மாநில மக்களே! கூட்டாட்சி தர்பார் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.. தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கிறவர்கள் கூட்டம் அது. நாடு தழுவிய சுயசார்பு திட்டத்தை அறிவித்ததைப் போல பீகாரும் சுயசார்பில் தன்னிறைவு அடைய வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு மிக முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.