For Daily Alerts
Just In
பகத்சிங்கின் பேரன் இமாச்சல் பிரதேச சாலை விபத்தில் மரணம்
சிம்லா: சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் பகத்சிங்கின் பேரன் முறை வரும் அபிதேஜ் சிங் சந்து என்பவர் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
சிம்லாவில் உள்ள ராம்பூர் புஷாகர் என்ற பகுதியில் நடந்த விபத்தில் சந்து மரணமடைந்தார். பஞ்சாபில் உள்ள மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்து வந்தார் சந்து. ஜாதி, மதமற்ற இந்திய அரசியலுக்காக அவர் பாடுபட்டு வந்தார். மேலும் அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற இயக்கத்தையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சிம்லாவில் அவர் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்துவின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Abhitej Singh Sandhu, grand nephew of freedom fighter Bhagat Singh died on Sunday,May 29 in a fatal road accident in Rampur Bushahr area near Shimla in Himachal Pradesh.
Story first published: Sunday, May 29, 2016, 15:28 [IST]