தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்படத் தடை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
டெல்லி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா உள்பட 10 மாநில மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர்கள் செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜூலை 4ஆம் தேதி வரை தடை உத்தரவு நீடிக்கும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்கள் நியமிக்கப்படுவதற்காக புகார் எழுந்துள்ளதையடுத்து பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் நியமனத்தில் உரிய வதிகள் பின்பற்றவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட
10 மாநில மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.