முதலிரவில் மாப்பிள்ளைக்கு தூக்கமாத்திரை கொடுத்து பணம் நகையுடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்
புது மாப்பிள்ளைக்கு தூக்கமாத்திரையை தண்ணீரில் கொடுத்து விட்டு முதலிரவு நாளில் நகை, பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார் புது மணப்பெண்.
காசியாபாத்: 'டோலி கி டால்' என்ற பாலிவுட் படத்தில் முதலிரவு நாளில் நகை பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆவார் மணப்பெண். அந்த படத்தில் வருவதைப் போல காசியாபாத்தில் பங்கஜ் என்பவரின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது.
ஒவ்வொரு திருமண தம்பதிகளுக்கும் முதல் இரவில் மறக்க முடியாத சம்பவம் இருக்கும். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருமணமாகி முதல் இரவு கனவோடு அறைக்குள் சென்றார் மணமகன் பங்கஜ். மனைவியான புதுமணப்பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்தார். அதில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.
இதை அறியாத பங்கஜ், சந்தோசமாக வாங்கி குடித்தார். தூக்க மருந்து கலந்த தண்ணீர் குடித்ததில் பங்கஜ் நன்றாக தூங்கிவிட்டார். மணப்பெண் வீட்டில் இருந்த 77 ஆயிரம் ரொக்கப் பணம், 175 கிராம் தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் பங்கஜ் எழுந்து வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறைக்குள் சென்று அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
பங்கஜ் குடும்பத்தினர் இப்போது மணப்பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாலிவுட் பட பாணியில் நகையை திருடிக்கொண்டு ஓடியுள்ளார் மணப்பெண். பங்கஜ்க்கு நடந்த முதலிரவு இப்போது மறக்க முடியாத முதலிரவாகிவிட்டது.