புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது.. செம க்ளிக்!
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வில் இன்று ஒரு மைல் கல் கடக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை பார்த்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே, இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில், சந்திராயன்-2 தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன. அதில் ஷேர் செய்யப்பட்ட ஒரு படம், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாகும்.
இந்த ஸ்டேஜ் என்பது சந்திராயன்-2 பயணத்தில் முக்கியமான கட்டம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் என்றாலும் அது மிகையான வார்த்தை கிடையாது.
#GSLVMkIII-M1 successfully injects #Chandrayaan2 spacecraft into Earth Orbit
— ISRO (@isro) July 22, 2019
Here's the view of #Chandrayaan2 separation#ISRO pic.twitter.com/GG3oDIxduG
புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைந்தபோது மதியம் 2 மணி 59 வினாடிகள் ஆகியிருந்தது.