ஜி.எஸ்.டி. திருத்த மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றம் !
டெல்லி: மக்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக 4 மசோதாக்களில் 2 மசோதாக்கல் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் பல முறை நடத்தப்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, பல்வேறு திருத்தங்களுக்குப் பின், மீண்டும் இவ்வாரம் திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. மக்களைவையில் நடந்த விவாதத்தில் மசோதா குறித்த பயன்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கி பேசினார்.
இதையடுத்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவுடன் இணைந்த 4 மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்ற திருத்தங்கள் வாரியாக குரல் ஒட்டெடுப்பு நடந்தது . பின்னர் 4 மசோதாக்களில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.