வாதம் விவாதம் - ஜி.எஸ்.டி அமலாகி ஓராண்டு: "அரசுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்"
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி ஓராண்டு நிறைவு அடைவதை கொண்டாடுகிறது மத்திய அரசு. இது இந்திய தொழில், வணிகத்துறைக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா? ஏன்? எப்படி? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
அரசுக்கும் தொழில் துறைக்கும் கொண்டாட்டம் மக்களுக்கு தான் திண்டாட்டம் என்று கூறுகிறார் ட்விட்டர் நேயர் தமிழ் இனியன்.
"நடுவண் அரசுக்குக் கொண்டாட்டம், மாநில அரசுகளுக்கு ஏமாற்றம், சிறு குறு தொழிலாளர்களுக்குத் திண்டாட்டம், மக்களுக்கோ கூடுதல் செலவினம் போன்றவையே ஏக வரிக் கொள்கையின் ஓராண்டு நிறைவு சாதனைகளாகும். இந்த ஓராண்டில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை விட புதியதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மிகக் குறைவு" என்று கூறுகிறார் பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேயர் சக்தி சரவணன்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ், "திண்டாட்டமே... இங்கு அனைத்தும் சாமனிய மக்கள் மீதே திணிக்கப்படுகிறது. அதுவும், நடுத்தர வர்கம், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் பாதிக்கபடுகின்றன" என தெரிவித்துள்ளார்.
"ஜி.எஸ்.டி. வரவேற்கத்தக்கது....." என்று கூறியுள்ளார் கீர்த்தி எனும் ஃபேஸ்புக் நேயர்.
"சரக்கு மற்றும் சேவை வரியை சரியாக திட்டமிட்டு அமல்படுத்தாமல் பெருமைக்காகவும் சில சுய நலத்திற்காகவும் செய்ததால் வணிகர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் மக்களுக்கும் இது திண்டாட்டமே" என்று கருத்தை பதிவிட்டுள்ளார் கோமான் முகம்மது.
ஜி எஸ் டிக்கு பின்பு கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து, மீதி அனைத்து சிறு தொழில் நிறுவனங்களும் பாதிப்பு அடைந்ததுள்ளன என்று கூறுகிறார் ரமேஷ்.
பிற செய்திகள்:
- டெல்லி: 'ஒரே இடத்தில் 11 சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' #GroundReport
- அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா
- மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?
- "ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க, பாசனத்துக்கு ஏற்றதல்ல"