நாடாளுமன்ற வளாகத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவை எதிர்த்து காங்கிரஸ் எம்பி காந்தி சிலை முன் போராட்டம்
ஜிஎஸ்டியை கண்டித்து காங்கிரஸ் எம்பி ஆனந்த பாஸ்கர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி: ஜிஎஸ்டி அறிமுக விழாவைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி ஆனந்த பாஸ்கர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அறிமுக விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவை காங்கிரஸ் கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்பி ஆனந்த பாஸ்கர், ஜிஎஸ்டியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி அவசர கதியில் அறிமுகப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெறும் வேளையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.