ஜிஎஸ்டி வசம் வந்தது இந்தியா!
டெல்லி: ஜிஎஸ்டி சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இது
நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இன்று இரவு 11 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்த உள்ள நிலையில் ஆதரவு கட்சிகளுடன் இன்று மத்திய அரசு அமல்படுத்தியது.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தியுள்ளதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று பாஜக கூறியுள்ளது. 29 மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.