நடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த வினோத சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்...!
வீட்டு பாத்ரூமுக்குள் நுழைந்த முதலையின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
காந்திநகர்: நடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த விநோத சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடினார் மஹேந்திரா.. கதவை திறந்து பார்த்து மிரண்டும் போய்விட்டார்!
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்து வருபவர்தான் மஹேந்திரா பதியார். இவர் ராத்திரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது விநோதமான ஒரு சத்தம் கேட்டுள்ளது. அதனால் தூக்கம் கெட்டு எழுந்துவிட்டார். ஆனால் அந்த சத்தம் என்னவென்று தெரியவில்லை.. எங்கிருந்து வருகிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் லைட்டை போட்டு ஒவ்வொரு இடமாக தேடி வந்தார். அப்போதுதான் பாத்ரூமில் இருந்து அந்த சத்தம் வருவதை கேட்டார். ஒருவேளை பூனையாக இருக்குமோ என்று நினைத்து, பாத்ரூம் கதவை திறந்தார். அப்போதுதான் "ஆ"வென வாயை திறந்தபடி ஒரு முதலை இருந்துள்ளது. அந்த முதலை 4.5 அடி நீளத்துக்கு இருந்திருக்கிறது.
இதை பார்த்து "ஆ"வென அலறி அடித்து கொண்டு அந்த பாத்ரூம் கதவை மூடிவிட்டார். உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த அவர்களும் கிட்டத்தட்ட 1 மணிநேரம் போராடி அந்த முதலையை பிடித்தனர்.
பொதுவாக முதலையை பிடிக்க இவ்வளவு நேரம் ஆகாதாம்...ஆனால், அந்த முதலை பிடிக்கும்போது, அவ்வளவு ஆவேசமாக இருந்ததாம். பாத்ரூமில் கொஞ்சம் இருட்டாகவும் இருந்ததாம்.. அதனால்தான் வனத்துறையினர் இதை பிடிக்க சிரமப்பட்டுள்ளனர்.
இந்த ராத்திரி நேரத்தில், வீட்டு பாத்ரூமில் முதலை எப்படி வந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், விஷ்வமித்ரி நதி பக்கத்தில் இருக்கிறதாம். அங்கிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என்கிறார்கள். மஹேந்திரா வீட்டில் முதலை வந்த சமாச்சாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாத்ரூமுக்குள் வாயை திறந்த இந்த முதலையின் வீடியோதான் வைரலாகி வருகிறது.