For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாடகை தராத கோபத்தில் சகோதரிகள் இருவரை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளரின் மகன், நண்பர்கள்

By Siva
Google Oneindia Tamil News

குர்காவ்ன்: குர்காவ்ன் அருகே வீட்டு வாடகை கொடுக்காததால் சகோதரிகள் இருவரை வீட்டு உரிமையாளரின் மகன் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

டெல்லி அருகே உள்ள குர்காவ்ன் நகரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள பினோலா கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ 13 மற்றும் 16 வயது சகோதரிகள் வந்துள்ளனர்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த அந்த சகோதரிகளின் அண்ணன் வாடகை கொடுக்கவில்லை.

இதனால் கடுப்பான வீட்டு உரிமையாளரின் மகன் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து சகோதரிகள் இருவரையும் இழுத்துச் சென்றார். அந்த சகோதரிகளை அருகில் உள்ள கட்டிடத்தில் வைத்து அந்த 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

அந்த சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தார் இரவு முழுவதும் பூட்டிய வீட்டுக்குள் இருந்தனர். காலையில் அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களின் வீட்டுக் கதவை திறந்துவிட்டனர். இதையடுத்து அந்த சிறுமிகளின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம் அவதார்(50), ராம் கிஷன்(45), மந்தோஷ்(30) மற்றும் ஓம்பிர் ஆகியோரை கைது செய்தனர்.

வீட்டு உரிமையாளரின் மகன் தங்களிடம் தகாத முறையில் நடந்து வந்ததாகவும், இது குறித்து தங்களின் அண்ணன் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்ததலால் தான் அவர் இவ்வாறு செய்துவிட்டதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.

English summary
Two sisters aged 13 and 16 were allegedly raped by their landlord's son and this three friends for not paying rent near Gurgaon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X