கட்டாய மதமாற்றம்... மிருகம் போல உறவு - கொடூரனின் டார்ச்சரால் கதறும் பெண்
குருகிராம்: கட்டாய மதமாற்றம் செய்து தன்னை திருமணம் செய்து கொண்ட கணவன் இயற்கைக்கு மாறாக மிருக உறவு கொண்டு தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்துவதாக பெண் ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் கடந்த 2016ஆம் ஆண்டு ஹசார்கான் என்ற நபரை ஒரு தனியார் மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார். நட்பாக பழகிய அந்த நபர் திடீரென காதலிப்பதாக கூறி திருமணத்திற்கு ப்ரபோஸ் செய்திருக்கிறார். திருமணத்திற்கு சம்மதம் சொன்ன உடனேயே கட்டாயமாக மதமாற்றம் செய்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அந்த பெண்ணுக்கும் ஹசார்கானுக்கும் இடையே 22 வயது வித்தியாசம் உள்ளது. அதையும் மீறி ஹசார்கானை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
பொய் பாலியல் புகார்
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிறைக்குப் போனார் ஹசார்கான். ஜாமீனில் வெளிவந்த அவர் பலர் மீது தனது மனைவியை வைத்து பாலியல் புகார் கொடுத்து விடுவதாக கூறி மிரட்டி பணம் பறிப்பாராம். அதற்கு அந்த பெண் மறுத்தாலோ அடி உதைதானாம். குர்கான் நீதிமன்ற நீதிபதி மீதும் புகார் கொடுக்கச் சொல்லி அடித்து உதைத்திருக்கிறான். அதே போல போலீசார் மீதும் கூட்டு பலாத்கார புகார் அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான்.
இயற்கைக்கு மாறான உறவு
அதிக அளவில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில் வருவது போல உறவில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட மறுத்தால் அடி உதைதானாம். அவனை திருமணம் செய்த நாளில் இருந்தே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டார்ச்சரை அனுபவித்து வருவதாக கூறி அந்தப்பெண் போலீசில் கதறியிருக்கிறார்.
மகனை கொலை செய்துவிடுவேன்
கணவனின் கட்டாயத்திற்கு உடன்பட மறுத்தால் மகளை கொன்று விடுவதாக மிரட்டி மிரட்டியே காரியத்தை சாதித்துக்கொண்டிருக்கிறான். ஒருமுறை சிறைக்குப் போன அவன், தனது மனைவியை வைத்து பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்திருக்கிறான். ஏற்கனவே 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து கட்டப்பஞ்சாயத்து மூலம் அதற்கு தீர்வு கண்டு பணம் சம்பாதித்திருக்கிறான்.
டார்ச்சர் கொடூரம்
உடம்பு முழுக்க கிரிமினல் ரத்தம் ஊறிய ஒருவன்தான் இப்படி எல்லாம் யோசித்திருப்பான். அந்தப்பெண் இரண்டாவதாக கர்ப்பமான போது, அந்த குழந்தை தன்னுடையது இல்லை என்று சந்தேகப்பட்டிருக்கிறான். அதற்கும் அடி உதை கிடைத்துள்ளது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் தனது உறவுக்கார பெண்ணின் உதவியுடன் போய் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.