சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழாவில் தூங்கி வழிந்த குமாரசாமி.. வைரலாகும் வீடியோ
பெலகாவி: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழாவில் முதல்வர் குமாரசாமி தூங்கி வழியும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் பெங்களூரில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் குமாரசாமி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி தெருவோர வியாபாரிகள் என்ற அடையாள அட்டை, ஆதார் அட்டை இருப்போருக்கு 9 வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 2000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி பெலகாவியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான காசோலைகள் வழங்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.
#BIGNEWS: CM #HDKumarswamy was seen dozing off during a program in #Belagavi. The program was organised at Dharmanath Bhavan in Belagavi to distribute cheques under the Badavara Bandhu scheme. pic.twitter.com/Oq7WiIZ8bu
— NEWS9 (@NEWS9TWEETS) December 20, 2018
முன்னதாக அவர் இந்த விழாவில் தூங்கி வழிந்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.