வெட்கம் கெட்ட திமுக.. அனைத்தையும் செய்து விட்டு இன்று கூக்குரலிடுகிறது- எச் ராஜா கடும் விமர்சனம்
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கு எதிராக போராடும் மம்தா பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவிள்ளதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலை குறித்து தலைமை செயலாளர் மற்றும் மாநில டிஜிபியிடம் ஆளுநர் கே என் திரிபாதி கேட்டறிந்தார்.
இந்நிலையில் அரசியலமைப்பை காக்க போராடும் மம்தா பானர்ஜியுடன் துணை நிற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக.
— H Raja (@HRajaBJP) February 4, 2019
இதை கண்டித்து எச் ராஜா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவீட்டில் கூறுகையில் மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார்.
அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் எச் ராஜா.