For Quick Alerts
For Daily Alerts
Just In
2004-ல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதால் காங்.க்கு மரண அடி.. குர்ஷித் புத்தகத்தால் சர்ச்சை
டெல்லி: 2004ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பதில் மன்மோகன்சிங்கை பிரதமராக்கியதால் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு மரண அடி கிடைத்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் புத்தகத்தில் பதிவு செய்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் "The Other Side of the Mountain" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
- 1991-96ஆம் ஆண்டு காலத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது சிறப்பான நிதி அமைச்சராக செயல்பட்டவர் மன்மோகன்சிங்.
- 1999 ஆம் ஆண்டு எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள தெற்கு டெல்லியில் மன்மோகன்சிங் போட்டியிட்ட போதும் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
- 2004ஆம் ஆண்டு பிரதமராக மன்மோகன்சிங்கை சோனியா காந்தி தேர்வு செய்தது அனைத்து காங்கிரசாருக்கும் ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருந்தது.
- 2004-ல் பிரதமராக மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டதால் 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசால் மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது.
- அதே நேரத்தில் 2004-ல் பிரதமராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டிருந்தால் 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்கியிருக்காது. நிச்சயம் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும்.
- ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்கள் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான கறைகளாக அமைந்துவிட்டன.
Comments
salman khurshid congress pranab manmohan singh loksabha elections சல்மான் குர்ஷித் காங்கிரஸ் பிரணாப் மன்மோகன்சிங் லோக்சபா தேர்தல்
English summary
Manmohan Singh’s selection over Pranab Mukherjee in 2004 to head the UPA government came as a surprise not only to the Congress but also to outsiders and many argue the party might have averted the 2014 Lok Sabha drubbing if the choice had been otherwise, says former union minister Salman Khurshid.