For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜே.என்.யூ. விவகாரத்தில் இந்தியர்களை மோடி அரசு முட்டாளாக்குகிறது- லஷ்கர் தலைவர் சயீத்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குகிறது என்று லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் புகழ்பாடும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அப்சல் குருவை பாராட்டியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஆதரவளித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து சயீத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசு

ஜேஎன்யூ போராட்டம் குறித்து என் பெயரில் ட்விட்டரில் உள்ள போலி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதை வைத்து என் மீது குற்றம்சாட்டுவது இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குவதற்கு சிறந்த உதாரணம்.

குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீது உள்ள வெறுப்பு மற்றும் பகையால் தான் இந்தியா இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது.

மோடி அரசு

26/11 உள்பட அனைத்து விஷயங்களிலும் இந்தியாவின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை இந்த போலி ட்விட்டர் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய அரசு இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துள்ளது.

அப்சல் குரு

அப்சல் குரு

கடந்த 9ம் தேதி இரவு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை சில மாணவர்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reacting on Union Home Minister Rajnath Singh's statement on JNU protest, LeT founder Hafiz Saeed said that alleging him for JNU protests "based on a fake twitter account is a prime example of how Indian government fools its own people".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X