ஜெட் ஏர்வேஸ் பைலட் இனவெறி பேச்சு.. ஹர்பஜன்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை: ஜெட் ஏர்வேஸ் பைலட் இன வெறியுடன் நடந்து கொண்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பலவேறு டிவிட்டுகளை அவர் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஹர்பஜன்சிங் கூறியுள்ளதை பாருங்கள்.
So called this Bernd Hoesslin a pilot with @jetairways called my fellow indian(u bloody indian get out of my flight)while he is earning here
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 'சோ கால்டு' பைலட் பெர்ன்ட் ஹோஸ்லின் என்பவர், என் சக இந்தியரை பார்த்து, 'இந்தியனே, என் விமானத்தை விட்டு வெளியேறு' என்றார். அவர் இனவெறி ரீதியில் மட்டும் பேசவில்லை, ஒரு பெண் பயணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆணை உடல் ரீதியாகவும் தாக்கினாரர்.
Not only was he racist but physically assaulted a lady and abused a physically challenged man..absolutely disgraceful &shame on @jetairways
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்காக அவமானப்பட வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் போன்ற நடவடிக்கைகள் என் நாட்டில் அனுமதிக்கப்படக் கூடாது. இவ்வாறு டிவிட்டுகளில் தெரிவித்துள்ளார்.
Strict action must b taken &such things should not be allowed or tolerated in r country.. #proudtobeindian let's get together and sort this
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் ஹர்பஜன்சிங் தற்போது உள்நாட்டில் பல நகரங்களுக்கும் விமானத்தில் பயணித்து வருகிறார். ஆனால், எந்த விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதை டிவிட்டில் ஹர்பஜன்சிங் குறிப்பிடவில்லை.