ஹரியானா சட்டசபை தேர்தல்.. 90 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு.. 61.6% வாக்குகள் பதிவு!
Recommended Video
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் மிகவும் மந்தமாக நடந்து முடிந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அதிக கவனம் ஈர்க்கிறது.
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் மாநிலம் என்பதால் தேசிய கட்சிகள் இந்த தேர்தல் மீது அதிக கவனம் செலுத்துகிறது.ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு
தேர்தல் இல்லை
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்தது. இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.
எத்தனை பேர்
இந்திய தேசிய லோக் தள், ஆம் ஆத்மி மற்றும் ஸ்வராஜ் இந்தியா கட்சி, ஜேஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2014 இங்கு நடந்த தேர்தலில் 47 சட்டசபை தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
திட்டம்
அப்போது காங்கிரஸ் 15 இடங்களையும் ஐஎன்எல்டி 19 இடங்களையும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்றது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமான முயன்று வருகிறது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது.
எத்தனை பேர்
மொத்தம் 85 லட்சம் பெண்கள் உட்பட 1.83 கோடி பேர் இந்த தேர்தலில் ஹரியானாவில் வாக்களிக்கிறார்கள். மொத்தம் 19578 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பணிகள்
3.8 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்து வருகிறார்கள். 75000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எவ்வளவு பதிவானது
ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. காலையில் இருந்து மாலை வரை வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக சென்றது. மொத்தம் 61.62% வாக்குகள் மட்டுமே தேர்தலில் பதிவானது.