Surgical Strike 2: ஆஸ்பத்திரியில் இம்ரான்.. தீபாராதனை காட்டும் மோடி... தாக்குதலை கொண்டாடும் மக்கள்!
இணையத்தில் சர்ஜிக்கல்ஸ்டிரைக்2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
ஜம்மு: ஆஸ்பத்திரியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அட்மிட் ஆகிவிட்டது போன்ற படங்களுடன் இணையத்தில் மீம்கள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குல் நடத்தி சரமாரியாக அழித்ததையடுத்து #Surgicalstrike2 என்ற ஹேஷ்டேக் உருவாகி உள்ளது.
40 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு சரியான பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனாலும், #indiaWantsRevenge என்ற ஹேஷ்டேக் ட்ராண்டாகி, எப்போதுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டு மக்கள் கேள்விகளால் அதில் துளைத்தெடுத்து வந்தனர்.
அதன்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று விடிகாலை 3.30 மணிக்கு பதிலடியை பலமாக தர இறங்கியது இந்தியா. 40 2000 வகை மிராஜ் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்தி கூண்டோடு அழித்துவிட்டது.
ராகுல் காந்தி
அதிகாலையில் நாட்டையே அதிர வைத்து, 40 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு 300 பயங்கரவாதிகளை காவு வாங்கிவிட்டதை அறிந்து இதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை விமானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலை வணங்குவதாக டிவிட் போட்டுள்ளார்.
தேசிய கொடி
இதையடுத்து சர்ஜிக்கல் 2 என்ற ஹேஷ்டேக் உருவாகி உள்ளது. விமான படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும், தேசிய கொடியின் மூவர்ணம் கலந்த புகையை வெளிவிட்டவாறு விமானங்கள் வானில் பறப்பதை போல மீம்களை பறக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
விமானம்-பைக்
அதேபோல, பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பைக்கில் அந்நாட்டு கொடிகளுடன் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அந்த பைக்கையே விமானம் போல் சித்தரித்துவிட்டனர் நம் ஆட்கள். நீ பைக்கிலே போனாலும் விமான படை தாக்குதலில் நீ காலி என்பதுபோல அந்த புகைப்படம் உள்ளது.
ஆஸ்பத்திரி
இதைவிட காமெடி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஆஸ்பத்திரியில் படுத்து உள்ளதுபோல் உள்ளது. விமான படை தாக்குதல் நடந்ததால், இப்படி ஆஸ்பத்திரியில் வந்து அட்மிட்டே ஆயிட்டாராம். ஆஸ்பத்திரி வார்டு புளூ கலர் டிரெஸ், நெற்றியில் காயத்துக்கு கட்டு போட்டு இம்ரான்கானை படுக்கையில் படுக்க வைத்துவிட்டனர் நம் ஆட்கள்.
வீரர்களுக்கு அப்ளாஸ்
போட்ட பிளான் எல்லாம் பக்காவாக நடந்து முடிந்த திருப்தியில் மோடி கையில் தீபாராதனை காட்டி நிற்பது போல போட்டோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல வகை, வகையான போட்டோக்களை பதிவிட்டு இந்தியமக்கள் வீரர்களுக்கு அப்ளாஸ் அடித்து வருகிறார்கள்.