தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க 3 பொண்டாட்டி கட்டிக்கொள்ளுங்கள்: மாஜிஸ்திரேட்
போபால்: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஆண்கள் ஆளுக்கு 3 மனைவிகள் வைத்துக் கொள்ளுமாறு மத்திய பிரதேச மாநில சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பண்டல்கன்ட் பகுதியில் இருக்கும் திகம்கார் மாவட்டத்தில் உள்ள லிதோரா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஜதாரா சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பி.கே. பாண்டே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மனைவிகள்
மத்திய பிரதேசத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதை சமாளிக்க ஆண்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனைவி குழந்தைகளை பெறவும், மற்ற இருவர் தண்ணீர் எடுக்கவும் செய்யலாம்.
தண்ணீர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஜதாரா பிளாக்கில் உள்ள பைர்வார் கிராமம் வழியாக சென்றேன். அப்போது இரவு 2 மணிக்கு கூட பெண்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதை காண முடிந்தது.
சமாளிக்க
தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. தண்ணீர் குடிக்க வேண்டும் எனில் பணம் உள்ளவர்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ளலாம். பணம் இல்லாதவர்களால் 3 மனைவிகளை சமாளிக்க முடியாது.
பெண்கள்
பண்டல்கன்ட் பகுதியில் பெண்களின் எண்ணிகை மிகவும் குறைவு. அது எனக்கும் தெரியும். நம் அண்டை மாவட்டமான உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியால் தான் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக உள்ளது என்றார் பாண்டே.