For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு திரண்டு வாருங்கள்.. பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு

19 -ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    19-ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு- வீடியோ

    திருப்பதி: 19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    அர்ச்சகர்களை ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய அதிகாரிகள் விடுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    அனுமதியில்லை

    அனுமதியில்லை

    சில அரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு புதையல் தோண்டும் பணியில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    திருப்பதி கோயிலில் காலங்காலமாக பெருமாளுக்கு அணிவித்து வந்த காசு மாலை உள்ளிட்ட பல்வேறு நகைகளை காணவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நகைகள் மாயம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை எழுப்ப தலைமை அர்ச்சகர் திட்டமிட்டுள்ளார்.

    புதையலை எடுக்க

    புதையலை எடுக்க

    இந்நிலையில் இதுகுறித்த ரமண தீட்சதலு கூறுகையில் புதையலை எடுப்பதற்காகவே கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது இந்துக்களுக்கு எதிரானது.

    திரண்டு வாருங்கள்

    திரண்டு வாருங்கள்

    எனவே நகைகள் மாயம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வரும் 19-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதால்பக்தர்கள் அனைவரும் அன்றைய தினம் திருப்பதி கோயிலுக்கு வருமாறு அர்ச்சகர் ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

    English summary
    Ramana Theekshithar invites Devotees to come to Tirupathi on July 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X