"துண்டா" போச்சு.. கணவனை இறுக்கி பிடித்து நாக்கை கடித்து துப்பிய பெண்.. ஏன் தெரியுமா? விஷயமே அங்கேதான்
கணவனின் மீது பாய்ந்து, அவரது நாக்கையே கடித்து துப்பியிருக்கிறார் அவரது மனைவி
கான்பூர்: உபியில் நடந்த ஒருசம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
2 வருடங்களுக்கு முன்பு, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ரன்ஹோலா என்ற பகுதியை சேர்ந்தவர் கரண்.. 22 வயதான இந்த இளைஞர் ஒரு தெருக்கூத்து கலைஞர்... மனைவி பெயர் காஜல்.. அவருக்கும் 22 வயதுதான்.
அந்த சமயம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தன்னுடைய கணவர் அழகாக இல்லாததால், கல்யாணம் ஆனதில் இருந்தே, காஜல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்..
என் கணவர் மரணம் தற்கொலை அல்ல.. இறப்புக்கு யார் காரணம்? டான்ஸர் ரமேஷின் மனைவி பரபரப்பு தகவல்
கொட்டிய ரத்தம்
இதனாலேயே கரணை அடிக்கடி திட்டி கொண்டே இருப்பார்.. சின்ன விஷயம் என்றாலும், அதை பெரிதுப்படுத்தி சண்டை போடுவார்.. காஜலே தகராறு செய்துவிட்டு, பிறகு இவரே கரணை சமாதானமும் செய்வார்.. அப்படித்தான் ஒருமுறை தகராறு ஏற்பட்டு சமாதானம் செய்ய முயன்றார்.. அப்போது, கரணுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த காஜல், திடீரென அவரது நாக்கை கடித்துவிட்டார்.. இதனால், கரணின் நாக்கு, பாதியளவு துண்டானது.. ரத்தம் கொட்டி வலியால் அலறினார்.. பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷன் செய்தாக வேண்டும்,
மாமியார் வீடு
இவர்களுக்குள் அடிக்கடி தகராறும், சண்டையும் வந்துபோகுமாம்.. ஒருகட்டத்தில் பிரச்சனை அதிகமாகிவிடவும், சல்மா தன்னுடைய குழந்தைகளுடன், அவரது அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.. அங்குதான் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.. முன்னாடி அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று, மனைவியை சமாதானப்படுத்த முயல்வாராம்.. ஆனால், சல்மா தன் பிடிவாதத்தை விடவேயில்லை.. வீட்டிற்கு வருமாறு பலமுறை கெஞ்சியும், சல்மாவின் மனம் இரங்கவில்லை.. என்ன செய்வதென்றே தெரியாமல் கலங்கிப்போன முன்னா, போலீசுக்கு சென்றுள்ளார்.. அவர்கள் மூலமாவது இந்த பிரச்சனை தீரும் என்று நம்பினார்..
ஓவர் பிடிவாதம்
இது தொடர்பாக போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்தும், சல்மா அவர்களின் பேச்சையும் கேட்கவில்லை.. முன்னாவால் தன்னுடைய குழந்தைகளைவிட்டு பிரிந்தும் தனியாக இருக்க முடியவில்லை.. சல்மா வெறுத்து திட்டினாலும், மாமியார் வீட்டுக்கு சென்று, தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடுவாராம்.. அப்படித்தான், நேற்று மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் முன்னா.. அவரை பார்த்ததுமே கொந்தளித்து போன சல்மா, அசிங்கமாக திட்ட ஆரம்பித்துள்ளார்..
துண்டு நாக்கு
அதுமட்டுமல்லாமல், இனிமேல் குழந்தையை பார்க்க, வீட்டுக்கு வரக்கூடாது என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார். அந்த நேரத்திலும், வீட்டிற்கு வந்துவிடுமாறு சல்மாவை அழைத்திருக்கிறார் முன்னா.. குழந்தைகளுடன் ஒன்றாக வாழலாம் என்று எடுத்து சொல்ல ஆரம்பித்துள்ளார்.. இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன சல்மா, முன்னாவை கடுமையாக தாக்கி துவங்கிவிட்டார்.. வலியால் முன்னா அலறினாலும், சல்மாவை திருப்பி தாக்காமல் இருந்துள்ளார்..
துண்டான நாக்கு
அதுமட்டுமல்லாமல், இனிமேல் குழந்தையை பார்க்க, வீட்டுக்கு வரக்கூடாது என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார். அந்த நேரத்திலும், வீட்டிற்கு வந்துவிடுமாறு சல்மாவை அழைத்திருக்கிறார் முன்னா.. குழந்தைகளுடன் ஒன்றாக வாழலாம் என்று எடுத்து சொல்ல ஆரம்பித்துள்ளார்.. இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன சல்மா, முன்னாவை கடுமையாக தாக்க துவங்கிவிட்டார்.. வலியால் முன்னா அலறினாலும், சல்மாவை திருப்பி தாக்காமல் இருந்துள்ளார்..