டெல்லியில் கடும் பனிமூட்டம்.. 59 விமானங்கள் தாமதம்.. 21 ரயில்கள் ரத்து!
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 59 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக 59 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் கடும் குளிரும் நிலவி வருகிறது.
குளிரின் தாக்கத்தால் மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். காலை 10 மணியை தாண்டியும் பனிமூட்டம் விலகாமல் உள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். பனிமூட்டத்தால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் 59 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 13 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் குளிர் காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.