For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் வெள்ளம்: இன்னும் 3 நாள்களுக்கு மழை வெளுக்குமாம்!

பெங்களூரில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இன்னும் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை கொட்டி வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பெங்களூரில் கடந்த 14ஆம் தேதி இரவு விடிய, விடிய கன மழை பெய்தது. 24 மணி நேரத்தில் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் மையத்தில் 14.4
செ.மீ. மழையும், சிட்டி ரயில் நிலையம் பகுதியில் 12.9 செ.மீ அளவு மழையும் பெய்திருந்தது.

Heavy rain for next 3 days in Bangalore

கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் வெள்ளம்
சூழ்ந்துள்ளதால் நகரவாசிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கன மழை அடுத்த 3 நாள்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி 4 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஒரேநாளில் 14 செ.மீ. மழை
கொட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
As per Indian Metrological centre's weather report, a heavy rain willoccur for next 3 days in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X