புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. நாகாலாந்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு
கொஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காணப்படுகிறது.
வட இந்தியா முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. நாகாலாந்தில் வடகிழக்கு பகுதியில் எதிர்பாராத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பனிப்பொழிவு சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் பஞ்சு போல் பனி பறந்து விழும் காட்சியை ஆஹா அற்புதம் என சொல்ல வைக்கிறது.
மறந்துடாதீங்க.. இந்த 4 நிதி சார்ந்த வேலைகளுக்கு டிச.31 தான் கடைசி தேதி... விவரங்கள்
வீடியோ
அப்படியே சாலைகளில் வெள்ளை துணி போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஜுன்ஹெஹோட்டோ மாவட்டத்தில் சுருஹோட்டோ தொகுதியின் எம்எல்ஏ எச் கெஹ்ஹோவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆசிர்வாதம்
அவர் குறிப்பிடுகையில் லுவிஷே கிராமத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த கிறிஸ்துமஸையொட்டி இயற்கை அன்னை காட்டும் ஆசிர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.
|
பனிப்பொழிவு
வடகிழக்கு பகுதியில் குறிப்பாக அருணாசல பிரதேசம், கிழக்கு அஸ்ஸாம், நாகாலாந்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிப்பதால் மலை பிரதேசங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
|
கடுங்குளிர்
வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாத வானிலை உள்ளது. இதுவும் பனிப்பொழிவிற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக பனிப்பொழிவு மேற்கு பகுதியில் இருந்தே வரும் இதுவும் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பெய்யும் மழைக்கு காரணமாக இருக்கும்.