ஜார்க்கண்டுக்கு புதிய சகாப்தம்.. ஹேமந்த் சோரன் மட்டற்ற மகிழ்ச்சி
ராஞ்சி: ஜார்க்கண்டுக்கு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பெரும்பான்மை 41 இடங்கள் தேவைப்படுகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது முதல்வராக உள்ள ரகுபர் தாஸ் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில் இன்று மாநிலத்துக்கு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது.
Hemant Soren, Jharkhand Mukti Morcha (JMM) in Ranchi: Today a new chapter will begin for this state. I want to assure everyone that their hopes will not be broken irrespective of their caste, creed, religion and profession. #JharkhandElectionResults pic.twitter.com/vIONxhl98K
— ANI (@ANI) 23 December 2019
ஜாதி, மத, தொழில் அடிப்படையில் யாருடைய நம்பிக்கையையும் தகர்க்க மாட்டேன் என மாநில மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஆதரித்த லாலு பிரசாத், சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி.
எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் ஹேமந்த் சோரன்.