டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் இதோ...
டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் இங்கு வெளியாகியுள்ளன.
Recommended Video
டெல்லி: டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி புராரி பகுதியில் இரண்டு அடுக்கு மாடி வீட்டில் 11 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் மளிகைக் கடை மற்றும் பிளைவுட் வியாபாரம் செய்து வந்தனர். இன்று காலை பால் வாங்குவதற்காக இவர்களது கடைக்கு ஒருவர் வந்தார்.
அப்போது வழக்கம் போல் 6 மணிக்கு திறக்கவேண்டிய கடை காலை 7.30 மணியாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த நபர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அவர் அங்கு 11 பேரின் சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாம். அவர்களின் பெயர்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
1.நாராயண் (75), (பெண்)
2.அவரது மகன்கள் லலித் (42)
3.பூபி (46)
4.மகள் பிரதீபா (60),
5.மருமகள்கள் சுவிதா (42) (பூபியின் மனைவி)
6.டீனா (38) (லலித்தின் மனைவி )
7.பேத்திகள் பிரியங்கா (30) (பிரதீபாவின் மகள்)
8.நீத்து (24) (பூபியின் மகள்)
9.மீனு (22) (பூபியின் மற்றொரு மகள்)
10.பேரன் திரு (12) (பூபியின் மகன்)
11.மற்றொரு திரு (11) (லலித்தின் மகன்) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.