மனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய விஷயம் எது தெரியுமா?- வைரலாகும் வீடியோ #MissWorld2017
உலக அழகியாக மானுஷி சில்லரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலுமே அவரை அவருக்கு அப்பட்டம் வழங்கியதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
Recommended Video
சண்டீகர்: இந்தாண்டின் உலக அழகியாக மானுஷி சில்லர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உலக அழகி பட்டமானது வெறும் அழகுக்காக அளிக்கப்படுவது அல்ல. அந்த நபரின் புத்தி சாதுர்யம், முடிவு எடுக்கும் திறன், அனைவரையும் கவரும் பதில் ஆகியவற்றை கொண்டே வழங்கப்படுகிறது.
கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சீனாவின் சான்யாவில் நடைபெற்ற உலக அழகி பட்டத்துக்கான போட்டியில் 108 நாடுகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர். 118 பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
நெகிழ்ச்சியான பதில்
அவர்களில் உலக அழகியாக இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்வு செய்வதற்கு முன்னால் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மானுஷி மிகவும் நெகிழ்ச்சியாக பதிலளிதார்.
|
தாய்தான்
அதாவது உலகில் அதிக சம்பளம் பெறும் தகுதி எந்த தொழிலுக்காக வழங்கப்படுகிறது, ஏன் என்பது கேள்வியாகும். அதற்கு மானுஷியின் பதில், நான் எனது தாயுடன் மிகவும் பிணைப்பாக இருப்பதால் உலகிலேயே அதிக மதிப்புக்குரியவர் தாய்தான்.
அன்பு, மரியாதை
ஊதியம் என்று பார்த்தோமேயானால் அது பணமாக இருக்காது, நாம் அவரிடம் செலுத்தும் அன்பும் மரியாதையும்தான் என கருதுகிறேன். எனது வாழ்வில் என் தாய்தான் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தார். எல்லா தாய்களும் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களை செய்கின்றனர்.
மானுஷி தேர்வு
ஆகவே தாய்க்கு அதிக ஊதியமும், அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று கருதுகிறேன் என்று மானுஷி தெரிவித்தார். அப்போது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. இதையடுத்து உலக அழகி யார் என்ற அறிவிப்பின்போதே அரங்கத்தில் இருந்தோர் இந்தியா இந்தியா என்று கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மானுஷி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.