ஆர்டிஎக்ஸ் குண்டுகளுடன் டெல்லிக்குள் ஊடுருவிய 9 தீவிரவாதிகள்! உஷார் நிலையில் போலீஸ்
டெல்லி: சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஆர்டிஎக்ஸ் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியில் சமீபத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இன்று ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று, வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தலைநகர் டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த 9 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும், தகவல் கிடைத்துள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
3 மாதங்கள் முன்பே தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், சுதந்திரதினத்தின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.