சாவர்கர் பிறந்தநாள்.. பள்ளி குழந்தைகளுக்கு பட்டா கத்தி வழங்கிய இந்து மகாசபை!
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பட்டா கத்தியை கொடுத்து சாவர்கரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறது இந்து மகாசபை/
மகாத்மா காந்தியை படுகொலை செய்த இயக்கம் இந்து மகாசபை. இவ்வழக்கில் கோட்சே தூக்கிலிடப்பட்டார். இதே வழக்கில் சாவர்கர் தப்பினார்.
சாவர்கரின் பிறந்தநாளை இந்து மகாசபையினர் ஆக்ராவில் கொண்டாடினர். அங்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பட்டா கத்தியைக் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அப்போது பேசிய இந்து மகாசபையின் செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே, லோக்சபா தேர்தல் வெற்றி மூலம் சாவர்கர் கண்ட கனவின் முதல் பகுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். இந்துக்களை ராணுவமயமாக்கும் சாவர்கரின் கனவின் 2-வது பகுதியை பட்டா கத்திகள் வழங்கி நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.
கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்
மேலும் இந்துக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள கற்பிக்க வேண்டும் என்றும் அசோக் பாண்டே தெரிவித்தார்,