பயங்கர பட்டாக் கத்திகளுடன் 'ராம நவமி' ஊர்வலம் நடத்திய இந்துத்துவா இயக்கங்கள்!
பட்டாக் கத்திகளை ஏந்தியபடி ராம நவமி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
சிலிகுரி/ அலகாபாத்: ராம நவமி நாளான இன்று பயங்கர பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகளை நடத்தி உள்ளன.
ராமநவமி நாளையொட்டி பல இடங்களில் இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகள் நடத்தின. மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பட்டாக் கத்திகளை இளைஞர்கள் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்திலும் பட்டாக் கத்திகளை உயர்த்தி பிடித்தபடி ஆக்ரோஷத்துடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Ram Mandir Mahotsav Samiti took out a procession on the occasion of #RamNavami where people were seen brandishing swords, in West Bengal's Siliguri pic.twitter.com/UZudBIo0Hn
— ANI (@ANI) March 25, 2018
பெண்களும் பட்டாக் கத்திகளுடன் இந்துத்துவா கோஷங்களை எழுப்பியது கடும் சர்ச்சையாகி உள்ளது.
Allahabad: Hindu Yuva Vahini workers carried out a procession on the occasion of #RamNavami where they were seen brandishing swords. pic.twitter.com/ToPHFkWsfI
— ANI UP (@ANINewsUP) March 25, 2018