For Daily Alerts
Just In
முதுகு வலி.. மருத்துவமனையில் ராஜ்நாத் சிங்
டெல்லி: கடுமையான முதுகுவலி காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று பிற்பகலுக்கு மேல் ராஜ்நாத் சிங்குக்கு கீழ் முதுகுப் பகுதியில் வலி எடுக்க ஆரம்பித்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குப் பரிசோனைகள் நடத்தப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பிற்பகலில் அவையில் மதக் கலவர தடுப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. ஆனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
English summary
Union Home Minister Rajnath Singh was rushed to the All India Institute of Medical Sciences (AIIMS) in Delhi late on Wednesday following lower back problem. Singh has been admitted in the hospital. He had attended Parliament earlier in the day. Lok Sabha was adjourned in the afternoon following his absence from the House when the Communal Violence Bill was taken up.
Story first published: Thursday, August 14, 2014, 10:40 [IST]